சென்னை திருவல்லிக்கேணியில் நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் தயாநிதிமாறன்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.35 லட்சம் மதிப்பிலான நவீன உடற்பயிற்சி கூடத்தை மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் திறந்து வைத்துள்ளார். சட்டமன்ற மேன்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடம் அருகே சிறுவர்களுக்கான விளையாட்டு திடலுக்கு அமைக்கப்பட்டுள்ளது.சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.

திறந்து வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் நவீன உடற்பயிற்சி சாதனங்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு கருவிகளும் வைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: