துரைப்பாக்கம்: வேங்கைவாசல் நூக்கம்பாளையம் மாணிக்கம் நகர் கக்கன் தெருவை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் சந்தோஷ் (16). இச்சிறுவன், மேடவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இச்சிறுவன், நண்பர்களுடன் பைக்கில் ஈஞ்சம்பாக்கம் பாரதி அவென்யூ கடற்கரை பகுதிக்கு சென்றான். அங்கு நண்பர்கள் மூவரும் கடலில் குளித்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி சந்தோஷ் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டான். இதை பார்த்து நண்பர்கள் சத்தம் போட்டதால் அப்பகுதியில் நின்றிருந்த மீனவர்கள் ஓடிவந்து, கடலில் இறங்கி தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.