சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கிராம மக்களுக்கு சொந்தமான நிலத்தை வேறு நபர்களுக்கு பட்டா போட்டு தருவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். செம்பூர் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான 36 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலங்களை 5-க்கும் மேற்பட்ட வேறு சில நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்து பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாததால் கிராம மக்கள் சிவகங்கை- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.