ஆற்காடு: தமிழகத்தை ஆள்வது பாமகவின் இலக்கு கிடையாது என்று ஆற்காட்டில் அன்புமணி பேசினார். ஆற்காட்டில் பாமக நிர்வாகி இல்ல திருமண விழா நேற்று காலை நடந்தது. பாமக இளைஞர் சங்க தலைவர் அன்புமணி கலந்து கொண்டு பேசியதாவது: பசுமைத் தாயகம் சார்பில் 1996ல் பாலாற்றை பாதுகாப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வாணியம்பாடியிலிருந்து வாலாஜா வரை மூன்று நாட்கள் ராமதாஸ் சைக்கிளில் 5ஆயிரம் இளைஞர்களோடு சென்றார். நானும் 2001ல் வேலூர் வரை 32 கிலோமீட்டர் விழிப்புணர்வு பிரசாரம் செய்தேன். ஆனால், நிலைமை அப்படியே தான் உள்ளது. புல்லூரில் 6 அடியாக இருந்த தடுப்பணை தற்போது 26 அடியாக உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.