காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இருந்து ஈரோடு நோக்கி டேங்கர் லாரி ேநற்று இரவு சென்று கொண்டிருந்தது. லாரியை மகேந்திரபிரசாத் (45) ஓட்டினார். காங்கயம் சென்னிமலை சாலை திட்டுப்பாறை அருகே சென்றபோது காங்கயம் பாரதியார் நகரைச் சேர்ந்த தினேஷ்குமார்(23), காங்கயம் வாய்க்கால்மேடு தீபக்(19) இருவரும் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். திடீரென லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் நிலை தடுமாறிய லாரி சாலையில் இருந்த 5 மின் கம்பத்தை உடைத்துகொண்டு தாறுமாறாக ஓடி சென்று நின்றது. இதில் பைக் ஓட்டி வந்த தினேஷ்குமார் சம்ப இடத்திலேயே பலியானார்.