சென்னை: பெண் எஸ்.பி., கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகன் மீதான விசாரணையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐ.ஜி.,யாக பதவி வகித்துவரும் முருகன் மீது அதே துறையில் பணியாற்றும் பெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில், விசாகா கமிட்டியை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதை எதிர்த்து ஐ.ஜி. முருகனும், அவரை வேறு பிரிவுக்கு மாற்றக்கோரி பெண் எஸ்பியும் வழக்கு தொடர்ந்னர். இதற்கிடையே விசாகா கமிட்டி மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “ஐ.ஜி. மீதான பாலியல் புகார் குறித்து டி.ஜி.பி. ஸ்ரீலட்சுமி பிரசாத் தலைமையிலான விசாகா கமிட்டி விசாரணை நடத்தி முடித்து 2 வாரத்துக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். பாலியல் தொல்லையில் இருந்து பெண் அதிகாரிகள்,