கிருஷ்ணகிரி : சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களிலும், கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 8 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுலகம் மற்றும், டிஎஸ்பி கண்ணன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர நில அபகரிப்பு பிரிவிற்கு டிஎஸ்பி கண்ணன் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை அசோக் நகரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளனர்.