திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே சேவினிப்பட்டியில் விளைவிக்கப்படும் வெள்ளரிக்காய்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே சேவினிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் வினோத்குமார், முத்துக்குமார். இருவரும் டிப்ளமோ மெக்கானிக் ஆவர். சகோதரர்களான இருவரும் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன்றனர். தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆண்டில் 2 ஆயிரம் சதுர மீட்டரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்து வருகின்றனர். நல்ல லாபம் கிடைக்கவே அவர்கள் தொடர்ந்து வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அவ்வப்போது திருப்புத்தூர் தோட்டக்கலைத்துறை அலுவலர் காமாட்சி தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி வருகிறார்.