சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திரா வரை உள் தமிழக நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாலும், அதே பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றின் சுழற்சியாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் விளக்கமளித்துள்ளது.