நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டியில் விவசாயி வருதராஜை கொலை செய்து சடலத்தை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சொத்துக்காக வருதராஜை கொலை செய்ததாக அண்ணன் விஜயகுமார், உறவினர் மகேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சொத்துக்காக தம்பியை கொலை செய்து பரவக்காடு மலைப்பகுதியில் புதைத்தாக அண்ணன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.