தா.பேட்டை : திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள குரும்பலூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவரது மனைவி செல்லம்மாள், மருமகன் பிரகாஷ், மகன் பாலமுருகன், மகள் மீனா ஆகியோர் நேற்று பச்சமலைக்கு பூசாரி ஒருவரை பார்ப்பதற்காக வாகனத்தில் சென்றனர். மனநிலையும், உடல்நிலையும் சரியில்லாமல் இருந்த வெங்கடேஷ் பிரச்னையை சரி செய்வதற்காக பச்சமலையில் உள்ள வண்ணாடு வாலையூரில் பூசாமி பொன்னுசாமி (60) வீட்டுக்கு சென்றனர். நேற்றிரவு பூசாரியின் வீட்டில் தங்கியிருந்த வெங்கடேஷ் திடீரென அலறியபடி குடும்பத்தினரை சரமாரியாக அடித்துள்ளார். சத்தம் கேட்டு வந்த பொன்னுசாமி வெங்கடேசை பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றார்.