சென்னை: சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் மற்றும் திருமணப் பதிவு நிகழ்வுகள் இணையநெறிமுறை புகைப்படக்கருவிகள் வழி படம் பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென பொதுமக்களிடமிருந்து ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்திட்டத்திலிருந்த குறைபாடுகள் களையப்பட்டு 18.2.2019 முதல் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படுகிறது.சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணப்பதிவு/திருமணப்பதிவு முடிந்தவுடன் அப்பதிவு நிகழ்விற்கான காகித உறையிலிடப்பட்ட ஒளிப்பட குறுந்தகடு மற்றும் பிரத்தியேகமான காகித ஆவணப் பாதுகாப்பு உறையில் இடப்பட்ட ஆவணம்/திருமணச் சான்று ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்படும்.