மாட்டு வண்டியில் மணல் அள்ளினால் குற்றம், ஆனால் அரசே அள்ளினால் அதற்கு பெயர் என்ன : திருமாவளவன்

அரியலூர்  : மாட்டு வண்டியில் மணல் அள்ளினால் அது குற்றம், ஆனால் அரசே அள்ளினால் அதற்கு பெயர் என்ன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூர் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் பேசி வருகிறார். அப்போது திருமானூரில் மட்டும் மணல் குவாரி செயல்படக்கூடாது என்பது நோக்கமில்லை, எங்கேயும் செயல்படக்கூடாது என்று கூறினார். மேலும் மணலை மனிதன் உற்பத்தி செய்ய முடியாது என்றும் மணல்தான் நிலத்தை நீரை உள்வாங்கி பாதுகாக்கிறது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: