செங்கோட்டை: தமிழக - கேரள எல்லையான ஆரியங்காவு சோதனைச் சாவடியிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நெல்லை செங்கோட்டை - ஆரியங்காவு வழித்தடம் தமிழக - கேரள போக்குவரத்தில் முக்கிய இடம் பெறுகிறது. இந்த வழியாக தினமும் கேரளா நோக்கியும், கேரளாவிலிருந்து தமிழகம் நோக்கியும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள், பேருந்துகள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன. எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் இந்த வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்களில் கல், மணல், ஜல்லி போன்ற கனிமவள பொருட்கள், ரேஷன் பொருட்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதும், பிடிபடுவதும் வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.