திண்டிவனம் அருகே 41 சவரன் தங்கநகை, 1 கிலோ வெள்ளி கொள்ளை: காவல்நிலையம் அருகே நடந்த கொள்ளையால் மக்கள் அச்சம்

மயிலம்: திண்டிவனம் அடுத்த மயிலத்தில் காவல்நிலையத்திற்கு அருகே உள்ள வீட்டில் 41 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலம் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த போது இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளியே சென்றிருந்த தமிழரசன் வீடு திரும்பியபோது கதவு திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 41 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனது தெரிய வந்தது. தமிழரசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையத்தின் அருகே உள்ள வீட்டிலேயே மர்மநபர்கள் துணிச்சலாக கைவரிசையை காட்டி இருப்பது மயிலம் கிராமமக்களை அச்சமடைய செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: