பராமரிப்பு பணி காரணமாக ஓட்டேரி மயான பூமி 25ம் தேதி வரை மூடல்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை, அண்ணாநகர் மண்டலம், ஓட்டேரி மயான பூமியில்  எரியூட்டும் எரிவாயு கூடத்தில் உள்ள இயந்திரத்தில்  பழுது ஏற்பட்டிருந்த காரணத்தினால் 5ம் தேதி வரை மயான பூமி இயங்காது என ஏற்கனவே  தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது ஓட்டேரி மயானபூமியில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் 25ம் தேதி வரை இயங்காது. மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அண்ணாநகர் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயானபூமியை பயன்படுத்தி  கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: