கொளத்தூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் சம்பா மிளகாய் வியாபாரம் களைகட்ட தொடங்கியுள்ளது. கொளத்தூரில் விளையும் சம்பா மிளகாய் நல்ல காரம், நிறம், மனம், கொண்டதால் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக ஜனவரி முதல் வாரத்திலேயே விற்பனைக்கு வந்துவிடும். அதன்படி இந்த ஆண்டும் சீசன் தொடங்கியுள்ளது. ஈரோடு, கோவை, விருதுநகர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் சம்பா மிளகாயை வாங்க வரத்தொடங்கியுள்ளனர்.