மதுரை: மதுரையில் உள்ள திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மகேந்திர பாண்டியன் தாக்கல் செய்த மனுவில், சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு சிறப்பு காட்சிகள் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், தமிழகம் முழுவதும் சிறப்புக்காட்சிகள் என்ற பெயரில் ரூ.1000க்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.