மதுரை : அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அந்தந்த மாவட்ட கோயில் இணை ஆணையர்கள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் அறங்காவலர் இல்லாததால் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.