சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காணொளி காட்சி வசதியையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மின்னணு அறிவிப்பு பலகையையும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார். அனைத்து நீதிமன்றங்களிலும் காணொளி காட்சி வசதியை நடைமுறை படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யுமாறு அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றத் அறிவுறுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி காட்சிக்கான வரைவு விதி 2018ல் தயார் செய்யப்பட்டது. இந்த விதிகள் கடந்த ஜனவரி 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.