சென்னை: தமிழகத்துக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்று வழங்கும் திட்டத்தை, திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அவர் தொடங்கி வைத்தார்.