மேக் - அப் கலைவதால் ஹெல்மட் அணியாமல் செல்லக்கூடாது... எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு

சென்னை: மேக் - அப் கலையும் என்பதற்காக பெண்கள் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடாது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சாலை விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி சென்னை சேத்துப்பேட்டையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துக்கொண்டனர்.   

அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு சட்டம் ஏற்றினாலும் அதனை பொதுமக்கள் கடைபிடித்தல் தான் அந்த சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார். அழகை விட உயிர் முக்கியம் என்பதால் பெண்கள் கட்டாயமாக ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: