மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட 27-ம் தேதி வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. மதுரையில் பேட்டியளித்த அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி 10% இட ஒதுக்கீட்டுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் 10 சதவீத இடஒதுக்கீடு உயர் சாதியினர் நலனுக்காக கொண்டுவரப்பட்டது என குற்றம் சாட்டினார். சென்னை லயோலா கல்லூரிக்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.