மதுரைக்கு 27-ம் தேதி வரும் மோடிக்கு கருப்புக்கொடி... மே 17 இயக்கம் போராட்டம் அறிவிப்பு

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட 27-ம் தேதி வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. மதுரையில் பேட்டியளித்த அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி 10% இட ஒதுக்கீட்டுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் 10 சதவீத இடஒதுக்கீடு உயர் சாதியினர் நலனுக்காக கொண்டுவரப்பட்டது என குற்றம் சாட்டினார். சென்னை லயோலா கல்லூரிக்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்போது பெரியார் சிலையை அங்கேயே வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மத்திய அரசு சதி செய்வதாகவும் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டினார். பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: