சென்னை: இளையராஜாவுக்கு பாராட்டுவிழா நடத்துவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாராட்டு விழாவுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் தயாரிப்பாளர்கள் 2 பேர் வழக்கு தொடர்ந்தனர். அதில் விழாவுக்கு தடை விதிக்க தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சதீஷ்குமார் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த ஐகோர்ட் தயாரிப்பாளர் சங்கம் பதில் தர உத்தரவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜாவுக்கு பிப்ரவரி 2,3 தேதிகளில் பாராட்டு விழா நடத்தவுள்ளது.