சென்னை: சிறை விதிகளை சசிகலா மீறவில்லை என்று அவர் தரப்பு வழக்கறிஞர் அசோகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சாதாரண சிறை தண்டனையை சசிகலா அனுபவித்து வருவதாக கூறியுள்ளார். மேலும், சாதாரண தண்டனை பெற்றவர் சொந்த உடை அணிய விதி அனுமதிக்கிறது என்றும், பெங்களூரு முன்னாள் சிறை அதிகாரி ரூபா மீது வழக்கு தொடர்வோம் எனவும் கூறியுள்ளார்.