மாணவி கர்ப்பம்; வாலிபர் கைது

கீழ்ப்பாக்கம்:  அயனாவரம், தாகூர் நகரை சேர்ந்தவர் அருண் (22) மேள வித்வான். அதேப்பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியுடன் அருண் கடந்த 2 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது. நாளடைவில் அது காதலாக  மாறியதால், இருவரும் பூங்கா, பீச் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு உள்ளது. பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மானவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய அருணை போக்சோ சட்டத்தில்  நேற்று கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: