பட்டாபிராமில் பரபரப்பு 4 ைபக், 3 சைக்கிள் தீ வைத்து எரிப்பு

ஆவடி: பட்டாபிராமில் 4 பைக், 3 சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆவடியை அடுத்த பட்டாபிராம், பாரதியார் நகர், விநாயகர் கோயில் தெருவில் ஒரே வளாகத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் சுப்பிரமணி (47), கணேசன் (45), கனகராஜ் (46), யாபேஷ் (37) மற்றும் ரவி (45). இதில் சிலர் தனியார் கம்பெனியிலும் சிலர் கூலித் தொழிலும் செய்து வருகின்றனர். இவர்கள்  தங்களது பைக் மற்றும் சைக்கிள்களை வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர்.

அப்போது பைக், சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீர் கொண்டுவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 4 பைக்குகளும், 3 சைக்கிள்களும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுபற்றி பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: