ஆவடி: பட்டாபிராமில் 4 பைக், 3 சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆவடியை அடுத்த பட்டாபிராம், பாரதியார் நகர், விநாயகர் கோயில் தெருவில் ஒரே வளாகத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் சுப்பிரமணி (47), கணேசன் (45), கனகராஜ் (46), யாபேஷ் (37) மற்றும் ரவி (45). இதில் சிலர் தனியார் கம்பெனியிலும் சிலர் கூலித் தொழிலும் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது பைக் மற்றும் சைக்கிள்களை வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர்.