காணும் பொங்கல் நாளில் சிசிடிவி மூலம் மெரினா கண்காணிப்பு : கமிஷனர் விஸ்வநாதன் அறிவிப்பு

சென்னை: காணும் பொங்கல் நாளில் சிசிடிவி மூலம் மெரினா கடற்கரை முழுவதும் கண்காணிக்கப்படும் என்று சென்னை கமிஷனர் விஸ்வநாதன் அறிவித்தார்.தமிழ்நாடு காவல்துறை மற்றும் காவலர் சிறார், சிறுமியர் மன்றம் சார்பில், துரைப்பாக்கத்தில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில் ஓட்டம், கபடி, கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

இதில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது: “காணும் பொங்கலன்று மெரினா கடற்கரையில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் எல்இடி திரை அமைக்கப்பட்டு கூட்டம் கண்காணிக்கப்படும். இதனால் மெரினாவில் பயமின்றி பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாடலாம்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: