ராய்ப்பூர்: ஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சத்தீஸ்கரும் முன்அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் சிபிஐ-க்கு அளித்திருந்த ஒப்புதலை ரத்து செய்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். மேற்குவகங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சிபிஐ முன் அனுமதியின்றி சோதனை நடத்த தடை விதித்துள்ளார். இவர்களை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில அரசும் இதே நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சத்தீஸ்கர் அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.