வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதியில் அதிகரித்து வரும் சாராய விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாணியம்பாடி அடுத்த ராமையன்தோப்பு பாலாற்றின் கிளையாற்றில் இரவு பகல் நேரங்களில் சாராயம் அதிகளவில் விற்கப்படுகிறது. நாளுக்கு நாள் இங்கு குடிமகன்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த சாராய விற்பனையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.