குமரி: பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தை பெருந்தேர் விழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தை பெருந்தேர் விழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. 12-ந்தேதி காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5 மணிக்கு நினைத்ததை முடிக்கும் விநாயகருக்கும், ஸ்ரீ பூதநாதருக்கும், சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், காலை 7.45 முதல் 8.45 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து அன்னதானமும், மாலை 6 மணிக்கு மங்கள இசையும், 7 மணிக்கு பக்திமெல்லிசை விருந்தும், இரவு 9 மணிக்கு சுவாமியும் அம்பாளும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதலும் நடைபெறும். விழா நாட்களில் தினமும் பூஜையும், சுவாமி வாகனம் உலாவருதல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 9-ம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் திருத்தேர்களில் ஸ்ரீவிநாயகரையும், சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.