சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் பகுதியிலுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை குடியிருப்பில் வசித்து வருபவர் நரேஷ் (27). சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம், நரேஷ் பணிக்கு செல்லவில்லை. சக ஊழியர்கள் அவரை தேடி வசிக்கும் இடத்துக்கு வந்து, விசாரித்தபோது நரேஷ் அங்கு இல்லை என்று தெரிந்தது.அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் முத்துகுமார், புதுவண்ணாரப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.