ஆலந்தூர்: மீனம்பாக்கம் மேம்பால சாலையில் உள்ள ஜல்லி குவியலால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலை வழியாக சென்னை விமான நிலையம் வந்து செல்லும் வாகனங்களால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், விமான பயணிகள் நெரிசலில் சிக்கி குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் விமானங்களை தவறவிடும் நிலை ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வாக கடந்த 2008ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், விமான நிலையம் எதிரே, மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் 1.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. விமான நிலையத்துக்கு செல்வோர் மட்டுமின்றி தாம்பரம் - கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக சென் வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரமரிப்பில் இருந்த இந்த மேம்பாலம், பின்னர் தமிழக நெடுஞ்சாலை துறை கட்டுபாட்டுக்கு வந்தது.