சென்னை : தமிழக லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேடுதல் குழு உறுப்பினர்களாக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.