பெரம்பலூர்: பெரம்பலூரில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இருவேறு வழக்குகளில் கைதிகளுக்கு சாதகமாக பேசியதாக அரசு வழக்கறிஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்த சித்ராவை அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து கடந்த மாதம் அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. முன்னதாக பெரம்பலூர் மாவட்டத்தின் மகிளா நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்த சித்ரா போக்சோ வழக்கில் கைதானவருக்கு சாதகமாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசி வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியதாக குற்றசாட்டு எழுந்தது.