ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவர் லிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெ.,வின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் என பல்வேறு நபர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவர் லிச்சர்ட் பீலே ஜன., 9ம் தேதி ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜன., 11ம் தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஓபிஎஸ் மற்றும் சி.விஜயபாஸ்கருக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: