முக்கிய செய்தி உலகம் குவைத்தில் உலகின் 4-வது மிக நீளமான கடல் பாலம் அடுத்த ஆண்டு திறப்பு Dec 26, 2018 உலகம் கடல் பாலம் குவைத் குவைத்: பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் வரும் 2019 பிப்ரவரி இறுதியில் திறக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் வேகமாக வளரும் நாடுகளில் முக்கியமான இடத்தை வகிக்கிறது குவைத். அந்த நாட்டின் சீரிய வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உள்ளது. இந்நிலையில் உலகிலேயே நான்காவது நீளமான கடல் பாலம் ஒன்று அந்நாட்டில் கட்டப்பட்டுள்ளது. ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் கடல் பாலம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நவம்பரில் இந்த பாலத்தை கட்டும் பணி தொடங்கியது. இந்த பாலத்தை கட்ட 5 வருடங்கள் ஆகியுள்ளன. சுமார் 300 கோடி டாலர் செலவில் இந்தப் பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவில் பெரிய அளவில் தூண்கள் நிறுத்தப்பட்டு பாலம் அமைக்கபட்டுள்ளது.குவைத் சாட்டிலுள்ள சுபையா நகரம் பட்டு நகரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் மக்கள் வாழ முடியாத பகுதியாக இந்த பகுதி அறிவிக்கப்பட்டது. அங்கு, அதிக முதலீடுகளை கவரும் விதத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. குவைத் நகரையும், சுபையா நகரத்தையும் இணைக்கும் வகையில் அங்கு ஏற்கனவே ஒரு தரை வழிப்பாதை இருக்கிறது. அவ்வழியே சுபையாவை சென்றடைய 70 நிமிடங்கள் ஆகும். ஆனால் தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கடல் பாலம் மூலம் 20 நிமிடங்களில் சுபையா நகரை சென்றடைந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் 36 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 27 கிலோ மீட்டர் கடலில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் வரும் 2019-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் வகையில் சில நாட்களாக சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு
ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’
மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் மோடி உரை : வாக்கு ஜிஹாத் குறித்தும் சாடல்!
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!!
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!