திருவொற்றியூர்: மணலி அருகே ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மணலி அடுத்த பெரியார் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கார்த்திகேயன் (17). மணலில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். திருவொற்றியூர் பூங்காவனபுரம் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (27). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பானு. கார்த்திகேயன் குடும்பமும், நாகராஜ் குடும்பமும் உறவினர்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நாகராஜ் அவரது மனைவி பானு ஆகியோர் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர், அங்கிருந்து அருகே உள்ள சிவன் கோயிலுக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும் வீட்டுக்கு வந்தனர். அதன் பிறகு அரியலூர் அருகே உள்ள ஏரியில் குளிப்பதற்காக இரு குடும்பத்தினர் உள்பட சுமார் 10க்கும் மேற்பட்டோர் சென்றனர். கார்த்திகேயன், நாகராஜ் இருவரும் ஏரியில் குளித்துக்கொண்டிருக்க மற்ற அனைவரும் கரை ஓரத்தில் அமர்ந்து இவர்கள் குளிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.