சைதாப்பேட்டை தாலுகா வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் துணைத்தலைவர் தேர்வு: எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

புழல்: செங்குன்றத்தில் இயங்கி வரும் சைதாப்பேட்டை தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் 8 இயக்குனர்கள் தேர்தல் கடந்த அக்டோபர் 11ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை  கடந்த 15ம் தேதி நடந்தது.

இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட எம்.ரமேஷ், அந்தோணி, சூசைராஜ், ராஜ்குமார் புஷ்பராணி, தேன்மொழி ஆகிய 6 பேரும், அதிமுக சார்பில் போட்டியிட்ட பாப்பம்மாள், சந்தானம்மாள் ஆகிய 2 பேரும்  வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் வெற்றி பெற்றவர்களில் தலைவர் துணைத்தலைவர் தேர்வு நேற்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு செங்குன்றம் அமமுக ரமேஷும், துணைத்தலைவர் பதவிக்கு அந்தோணி  ஆகியோர் மட்டும் மனுத்தாக்கல் செய்தனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் மேற்கண்ட இருவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி சந்திரசேகர் அறிவித்தார். இதையடுத்து அவர்கள்  செங்குன்றத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: