சென்னை : மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனிடையே விதிகளையும் நீதிமன்ற உத்தரவுகளையும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரித்த நீதிமன்றம், விதிகளை கடைப்பிடிப்பதாக தமிழக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் உத்தரவாதம் அளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.