மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு...... நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம்

டெல்லி : நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் கையில் பதாகைகளை ஏந்தியபடி தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம், மேகதாது அணை விவகாரத்தால் நடந்த அமளிகளால் கடந்த 6 நாட்களும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னர் பதாகைகளை ஏந்தியபடி தமிழக அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதேபோல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கக்கோரி தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: