டெல்லி; ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் மற்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா விவகாரம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொய் கூறுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது வராக்கடன் ரூ.8.5 லட்சம் கோடியை தாண்டியது. ஆனால், ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் ரூ.2.5 லட்சம் கோடி என கூறியதாக தெரிவித்தார். ஜிஎஸ்டி அமலுக்கு பின்னர் நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அதிகரித்துள்தாக கூறியுள்ள ஜேட்லி, வங்கித்துறையை மத்திய அரசு பலப்படுத்தி வருகிறது என்றார். விஜய் மல்லையா விவகாரத்தில் ராகுல்ங தொடர்ந்து பொய்களை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக சாடினார். மல்லையாவிற்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கடன் வழங்கப்பட்டது. நீண்ட கால அரசியலுக்கு ராகுல் காந்தி உண்மையை பேச கற்று கொள்ள வேண்டும் என்றார்.