புழல்:செங்குன்றத்தில் உள்ள சைதாப்பேட்டை தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 7442 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தின் 8 இயக்குநர்களுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 11ம் தேதி நடைபெற்றது. அதிமுக சார்பில் 12 பேர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 6 பேர், திமுக சார்பில் 2 பேர் மற்றும் காங்கிரஸ் சார்பில் ஒருவர் என மொத்தம் 21 பேர் போட்டியிட்டனர். நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 912 வாக்குகள் பதிவாகின. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கி மாலை முடிந்தது. இதற்கிடையே கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் அதிமுகவை சேர்ந்த சௌந்தராஜன் ஐகோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தார். எனவே வாக்கை எண்ணக்கூடாது என உத்தரவு போடப்பட்டது.