×

தமிழ்நாடும் கர்நாடகாவும் இந்தியா - பாகிஸ்தான் அல்ல : கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி

சென்னை : மேகதாதுவில் புதிய அணை கட்டுவதை கவுரவ பிரச்சனையாக பார்க்கக்கூடாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும்  மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பான கோரிக்கையை தமிழக அரசிடம் கர்நாடக 30 வருடங்களாக வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர் காவிரி பிரச்சனை இரண்டு மாநிலங்களுடையே கடந்த 125 வருடங்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உபரி நீரை சேமிக்கவே புதிய அணை கட்டப்படுவதாகவும்,  மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக அரசும், மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவும், தமிழகமும் ஒன்றும் இந்தியா, பாகிஸ்தான் அல்ல என்றும் குமாரசாமி கருத்து கூறியுள்ளார்.புதிய அணையில் இருந்து ஒருபோதும் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க மாட்டோம் என்றும் அணைக்கட்டு இல்லாததால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் பெருமளவு கடலில் கலக்கிறது என்றும் சென்னை விமான நிலையத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,Kumarasamy ,Karnataka ,Pakistan ,India , Meghatad Dam, Karnataka Chief Minister, kumaraswamy, Interview
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...