இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை 6 வாரத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. திரைப்படத்தில் அரசை விமர்சித்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக ஏ.ஆர் முருகதாஸ் மீதான வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அரசின் கொள்கையை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் கருத்து தெரிவித்திருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: