திருச்சி: திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் போலீசை கட்டிப்பிடித்த சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழக காவல்துறையில் பணியில் உள்ள போலீசார் முதல் உயர் அதிகாரிகள் வரை பணி பளு காரணமாக மன சோர்வடைந்து மனதளவில் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதில் தற்கொலை வரை ெசல்வது தொடர்கதையாகி வருகிறது. இவர்களது மனச்சோர்வை போக்க காவலர் நல்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க சிறப்பு எஸ்ஐ ஒருவர் நள்ளிரவு சக பெண் போலீசை கட்டிப்பிடித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விபரம் வருமாறு: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள், சிறப்பு எஸ்ஐக்கள் பணியில் உள்ளனர். ேநற்று முன்தினம் இரவு பணியில் ெகாடாப்பை சேர்ந்த பாலசுப்பிரமணி (50) இருந்துள்ளார். அதுபோல் கணினி பிரிவில் திருச்சி புத்தூர் நால்ரோட்டை சேர்ந்த சூரியகலா (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தீவிர இரவு பணியில் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த சிறப்பு எஸ்ஐ பாலசுப்பிரமணி சோமரசம்பேட்டை பகுதியில் ரோந்து பணி முடிந்து காவல் நிலையம் வந்து ேசர்ந்தார்.