சிதம்பரம்: சிதம்பரத்தில் ேதாழி இறந்த துக்கத்தில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்ைத எலி கடித்ததால் அவரது உறவினர்கள், டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் காத்தா தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் வைத்தீஸ்வரன்(24). இவர் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்துள்ளார். இவருடைய தாய் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால் சொக்கலிங்கம் நகரில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி படித்துள்ளார். வைத்தீஸ்வரன் அண்மையில் வெளிநாடு சென்று சில நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9ம்தேதி அண்ணாமலைநகரில் தன்னுடன் படித்த தோழி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய இறுதி சடங்கில் வைத்தீஸ்வரன் கலந்து கொண்டுள்ளார். அதில் இருந்து வைத்தீஸ்வரன் மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்த வைத்தீஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய சித்தப்பா சரவணமுருகன் கொடுத்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.