×

தோழி இறந்த துக்கத்தில் பட்டதாரி வாலிபர் தற்கொலை அரசு மருத்துவமனையில் இருந்த சடலத்தை எலி கடித்ததால் உறவினர்கள் வாக்குவாதம்: சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் ேதாழி இறந்த துக்கத்தில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்ைத எலி கடித்ததால் அவரது உறவினர்கள், டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம்  காத்தா தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் வைத்தீஸ்வரன்(24). இவர் சிதம்பரம்  அருகே உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்துள்ளார். இவருடைய தாய் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால்  சொக்கலிங்கம் நகரில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி படித்துள்ளார்.  வைத்தீஸ்வரன் அண்மையில் வெளிநாடு சென்று சில நாட்களிலேயே திரும்பி  வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9ம்தேதி அண்ணாமலைநகரில்  தன்னுடன் படித்த தோழி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய இறுதி  சடங்கில் வைத்தீஸ்வரன் கலந்து கொண்டுள்ளார். அதில் இருந்து வைத்தீஸ்வரன்  மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்  தினம் இரவு வீட்டில் இருந்த வைத்தீஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து  கொண்டார். இதுகுறித்து அவருடைய சித்தப்பா சரவணமுருகன் கொடுத்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா  போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அரசு  மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைத்தீஸ்வரன்  உடல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை அவரது உடலை சில உறவினர்கள் பார்க்க  வந்துள்ளனர். அப்போது பீரிசரில் வைக்கப்பட்டிருந்த வைத்தீஸ்வரன் உடலில்  மூக்கு பகுதியில் எலி கடித்த காயம் இருந்துள்ளதை பார்த்துள்ளனர்.  இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டதற்கு அலட்சியமாக பதில் அளித்ததாக  கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் திரண்ட வைத்தீஸ்வரனின் உறவினர்கள்,  நண்பர்கள் அரசு மருத்துவமனையில் சடலத்திற்கு பாதுகாப்பு இல்லை என கூறி  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Relatives , Sudden, girlfriend, The corpse, government hospital, bites,Chidambaram
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...