சென்னை: சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜர் ஆனார். சில தினங்களுக்கு முன்பு சீனிவாசன் காணவில்லை என அவரது மனைவி புகார் கொடுத்து இருந்தார். உதகையில் பணம்கேட்டு சீனிவாசனை சிலர் அடைத்து வைத்திருப்பதாகவும் மனைவி புகார் அளித்திருந்தார். புகார் அளித்திருந்த நிலையில் காவல்நிலையத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜர் ஆனார்.