சென்னை : தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.